Tuesday 14 February 2012

அபிராமி அந்தாதி

கலையாத கல்வியும், குறையாத வயதும்,
     ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும்,
     குன்றாத இளமையும், கழுபிணி இலாத  உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,
     தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்,
     மாறாத வார்த்தையும்,  தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும்,
     ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்,
     துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப்,
     பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;
அலைஅழி அறி துயில்கொள் மாயனது தங்கையே!
     ஆதி கடவூரின் வாழ்வே! 
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
     அருள் வாமி! அபிராமியே!  

No comments:

Post a Comment