Saturday 26 May 2012

கொய்யாப்பழம்

குளிர்காலத்தில், கொய்யாப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்ற கருத்தினை இயற்கை மருத்துவம் மறுக்கிறது. உண்மையில் கொய்யாப் பழம் சளியை விரட்டி, சளியால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நிவாரணம் தரும் என்பதே அறிவியல் பூர்வ உண்மையாகும்.

கொய்யாப்பழத்தில் நெல்லிக் காயை போல "வைட்டமின் சி' சத்து நிறைந்துள்ளது. வளரும் குழந்தைகள், தினமும் ஒன்று அல்லது இரண்டு கொய்யாப்பழங்களை சாப்பிடுவது நல்லது. ரத்த சோகை இருப்பவர் களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் கொய்யாப்பழம் நல்ல மருந்தாகும்.

இயற்கை மருத்துவத்தில் மா இலையுடன், கொய்யா இலையைக் காய வைத்து அரைத்து, பல்பொடியாகப் பயன்படுத்தினால் பல்லில், ஈறுகளில் ரத்தம் வடிதல், ஈறுவீக்கம் போன்றவை குணமாகும் என கூறப்படுகிறது. உடலின் சூட்டினைத் தணிக்கும் இயல்பும் கொய்யாப் பழத்திற்கு உள்ளது.
 

பலாப்பழம்

பழவகைகளில் மிகவும் பெரிய பழம் என்றால் அது பலாப்பழம் தான். இந்த பழம் பச்சை நிறத்திலான கரடு முரடான மேல் தோலை கொண்டதாக அமைந்திருக்கும். இதன் தோல் உறுதியாகவும் அதன் அடிப்பாகத்தில் சுளைகள் நிறைந்து காணப்படும் .

பலாச்சுளைகள் ஒவ்வொன்றும் நரம்புகள் போன்ற சடைகளின் இடையில் பதிந்திருக்கும். பலாப்பழத்தின் சுவை மரத்துக்கு மரம் வேறுபாடு உடையதாக இருக்கும். சில பலாப்பழ சுளைகள் தேன் போன்று இனிப்பாகவும், சில பழங்கள் இனிப்பு குறைந்தவையாகவும் இருக்கும் .

மஞ்சள் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பலாப்பழ சுளைகள் காணப்படும். பழுத்த, நல்ல பழம் என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பலாக்கொட்டைகளை வேக வைத்தோ, அவித்தோ, பொரித்தோ, காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தோ சாப்பிடலாம் .

விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது பலாப்பழத்தில். உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கும். நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது. பலாச்சுளைகளை மென்று தின்ன வேண்டும். இரத்தத்தை விருத்தி ஆக்கும் தன்மையும் இந்த பழத்தில் உண்டு. எதுவும் அளவுடன் சாப்பிட வேண்டும் . அதுதான் உடம்புக்கு நல்லது.

மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. உலகின் சில இடங்களில் 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படுகிறது

இப்போது பலாப்பழ சீசன் என்பதால் எல்லா இடங்களிலும் பலாப்பழம் விற்கப்படுகிறது. பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது. பலாச்சுளைகள் பொட்டாசியம், கல்சியம் , பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.

100 கிராம் பலாப்பழத்தில், 303 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க, பலாப்பழம் சிறந்ததாகும். பலாப்பழத்தில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால், எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் பலாப்பழத்தை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். புற்றுநோயைத் தடுக்கும் "ஆன்ட்டி-ஆக்சிடெண்டுகள்' பலாப்பழத்தில் உள்ளன என சமீபகால ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது. சீசனில் கிடைக்கும் பழங்கள், நம் உணவில் இடம் பெற வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பலாப்பழத்தின் சுவையை எல்லோரும் சுவைத்து பாருங்கள்.
 

கிரீன் டீயின் நன்மைகள்.

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.

பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.

சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ் நாட்களை நீடிக்க செய்கின்றன. எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரீன் டீயின் நன்மைகள்
  1. பருக்கள் வராமல் தடுக்கிறது.
  2. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
  3. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
  4. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  5. இதய நோய் வராமல் தடுக்கிறது.
  6. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.
  7. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
  8. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.
  9. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.
  10. சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.
  11. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
  12. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
  13. ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
  14. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
  15. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது. 
  16. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது. 
  17. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
  18. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

பேரிச்சம் பழத்தின் நன்மைகள் !!!!

பழங்களிலேயே தனிச்சுவை கொண்டது பேரிச்சம் பழம். தரமான, நல்ல சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளிலேயே விளைகிறது.

பேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு.


தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும்.

உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சிலபேரிச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும் உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும்.

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. ஒரு அவுன்ஸ் பேரிச்சம் பழத்தில் 170 மில்லி கிராம் வைட்டமின் ஏ சத்து அடங்கியுள்ளது. மேலும் பி1 வைட்டமின் 26 மில்லி கிராமும், பி2 வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. இரும்புச் சத்து 30 மில்லி கிராமும், சுண்ணாம்புச் சத்து 20மில்லி கிராமும் உள்ளது.

பெண்களுக்குப் பொதுவாக கால்சியம் குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் கால்சியம் குறைபாட்டை தவிர்க்க முடியும். மேலும், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும்சோர்வையும் பேரிச்சம்பழம் உட்கொள்வதால் போக்க முடியும்.
இள‌ம் பெ‌ண்க‌ள் பெரு‌ம்பாலானவ‌ர்களு‌க்கு இர‌த்த சோகை உ‌ள்ளது. இதனா‌ல் குழ‌ந்தை‌ப் பேறு காலக‌ட்ட‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்படு‌கிறது. இதனை‌த் த‌வி‌ர்‌க்க பே‌ரி‌ச்ச‌ம் பழ‌த்தை உ‌ட்கொ‌ள்ளு‌ங்கள் இர‌த்த சோகையை‌ப் போ‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

வளரு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு  பே‌ரி‌ச்ச‌ம் பழ‌ம் கொடு‌த்து வ‌ந்தா‌ல் அது அவ‌ர்க‌ளி‌ன் ஆரோ‌க்‌கியமான வள‌ர்‌ச்‌சியை உறு‌திசெ‌ய்யு‌ம் எ‌ன்ப‌தி‌ல் ஐய‌மி‌ல்லை.

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் அதிகம் துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

This is your life


Find a passion and pursue it

Dream big, spend quality time with good friends, laugh everyday

Reminisce about the good old days but look with optimism to the future..

Learn more, Be creative, Never give up

Do what you love, and enjoy the simple things in life.. 

Forgive even when it's hard, and don't forget to smile. 

Be grateful, try new things, work hard, trust in yourself.. 

Live for today, and above all, make every moment count !

'எலுமிச்சை' சர்வ ரோக நிவாரணி!

எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.

மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. எலுமிச்சையின் தாயகம் பாரதம்தான். முதன்முதலாக 1784-ல் கார்ஸ்வில் ஹெம்மீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட இரத்தத்தை தூய்மைப்படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை என கண்டறிந்தார். உதாரணமாக இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய வீரர்களின் காயத்தில் இருந்து ஒழுகும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சையை உபயோகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தியர்களை விட மேலை நாட்டினர் எலுமிச்சை பழத்தையும், அதன் விதை, தோல் அனைத்தையும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வாசனைப் பொருட்களும் தயாரிக்கின்றனர். இந்தியர்களின் வீடுகளில் எலுமிச்சை ஊறுகாய் இல்லாமல் இருக்காது.
கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.

100 கிராம் எலுமிச்சை பழத்தில்:

நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி

எலுமிச்சையின் பயன்கள்:

வயிறு பொருமலுக்கு:


சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்த்துத் தொல்லைக் கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லைகள் நீங்கும்.

தாகத்தைத் தணிக்க:

தற்போது கோடைக்காலத்தின் ஆரம்பத்தில் இருக்கிறோம். கோடை வெயிலின் தாக்கத்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு கப் நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு:

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.

கல்லீரல் பலப்பட:

எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.

தலைவலி நீங்க:

ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.

நீர்க் கடுப்பு நீங்க:

வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சினை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும். இரத்தக் கட்டுக்கு உடம்பில் எங்காவது அடிபட்டாலோ, வீங்கினாலோ ரத்தம் கட்டி இருக்கும். இந்தப் பகுதியை தொட்டாலே சிலருக்கு வலியெடுக்கும். இந்த ரத்தக்கட்டு நீங்க சுத்தமான இரும்புக் கரண்டியில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு கரிய போளத்தைப் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) போட்டு காய்ச்ச குழம்பு போல வரும். அதனை எடுத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள பகுதிகளில் பற்று போட வேண்டும். இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் சுத்தம் செய்து பற்று போட்டு வந்தால் ரத்தக்கட்டு குணமாகும்.

பித்தம் குறைய:

எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.

எலுமிச்சை தோல்:

எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர். இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்றவற்றிற்கு நல்லது. நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.

* எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.

* எலுமிச்சம் பழச்சாற்றை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.

* தாதுவைக் கெட்டிப்படுத்தும்.

* உடல் நமைச்சலைப் போக்கும்

* மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.

* மூலத்திற்கு சிறந்த மருந்தாகும். இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள்

இயற்கை தரும் பரிசு - இளநீர்:


தாகத்தைத் தணிக்கும் பானம் மட்டுமல்ல தாதுபொருட்கள் அடங்கிய பல நோய்களைத் தீர்க்கும் தன்மையும் கொண்டது.

மனித உடலில் அதிக அளவு நீர்ச்சத்து விரயமானால் அவற்றைச் சரி செய்ய எளிதில் குறைந்த செலவில் கிடைப்பது இளநீர் மட்டுமே. இளநீரில் உள்ள புரதச்சத்து பசும்பாலில் உள்ளதைவிட அதிகமாகும்.

இளநீர் தரும் சத்தின் அளவு 17.4 கலோரி ஆகும். ஆகையால் சிறந்த மருத்துவ குணம் கொண்ட இளநீர் மனித உடல்நலத்தைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இளநீரில் காணப்படும் முக்கிய சத்து சர்க்கரை சத்தாகும். இளநீரில் 5.5 விழுக்காடு சர்க்கரை சத்து அளவு உள்ளது. மற்றும் தாதுப்பொருட்களான பொட்டாசியம், சோடியம், கால்சியம், இரும்பு, செம்பு, கந்தகம், மெக்னீசீயம் போன்ற தாது உப்புக்கள் அடங்கியுள்ளன.

இளநீரில் ஊட்டச்சத்துக்கள்:
 
இளங்காய்களில் நீர்;: ஈரப்பதம்: 95.01, புரதம்: 0.13, கொழுப்பு: 0.12 மாவுப்பொருள்: 4.11, சாம்பல்: 0.63.

இளநீரின் பயன்கள்:

இளநீர் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.

இளநீர் முதியோர்களுக்கும். நோயாளிக்கும் சிறந்த ஊட்டச் சத்து பானமாகும்.

இளநீர் சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.

இளநீரை உடலில் பூசிக்கொண்டால் தட்டம்மை, சின்னம்மை., பெரியம்மை, ஆகியவைகளால் ஏற்படும் உடல் அரிப்பைத் தடுக்கலாம்.

இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்ற உதவுகிறது.

உடலில் ஏற்படும் நீர் இழப்பை சரி செய்வதற்கு இளநீரை பருகுவது நல்லது.

இளநீரில் உள்ள உப்புத்தன்மை மற்றும் வழவழப்புத் தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு பானமாக விளங்குகிறது.

இளநீர் ஊட்டசத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

புகையிலை மற்றும் மது போன்றவைகளினால் ஏற்படும் தீய விளைவுகளை நீக்கக்கூடிய நச்சு முறிவாக செயல்படுகிறது.

மனித குலத்திற்கு இயற்கை தந்துள்ள சத்தான இன்சுவை பானம் இளநீர் மட்டும்தான். மற்ற பானங்களுடன் ஒப்பிடுகையில் இளநீர் மட்டுமே அதிகமான பயன்களைத் தருகிறது.

இளநீர் மிகக் குறைந்த செலவில் அதிகப் பயன்களைத் தரவல்லது. எனவே தாகத்தைத் தணிக்க உடல்நலம் காக்க தினமும் ஒரு இளநீர் குடிப்போம் என்றும் நலமாய் இருப்போம்.
 

அரைஞாண் கயிறு

அரைஞாண் கயிறு உண்மையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினார்.

"அரைஞாண்" நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், திருஷ்டி பட கூடாதுன்னு தான் கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க ....

உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?? நிச்சயமாக இல்லை ....

அந்த அரைஞாண் கயிற்றின் பலன்கள் பல விதங்களில் உள்ளது

மருத்துவ பலன்
-----------------------------------
ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது.

உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம்

ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன . இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

இப்போது வெள்ளி , தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விடயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத் தான் செய்கிறார்கள். நானும் கட்டி இருக்கிறேன் ....

இந்த அரைஞாண் கொடியின் மகத்துவம் தெரியாமல் அதில் கண்ட கண்ட தாயத்துகளை கட்டி தொங்க விடுவதும், அது திருஷ்டி காக என்று புறம்பு கூறுவதும் தவறு....
நம் முன்னோர்கள் செய்த தவறு, தாங்கள் பின்பற்றிய முறைகளுக்கு உண்மையான உள் அர்த்தம் என்னவென்று சொல்லாமலேயே விட்டது ...
நம் முன்னோர்கள் நம் பெருமைகளை நமக்கு சொல்ல மறந்ததை போல அல்லாமல் இனி நாமாவது நம் பிள்ளைகளுக்கு இது போன்ற நம் பாரம்பரியத்தை விட்டுகொடுகாமல் சிறு சிறு விடயங்கலளையும் அவர்களுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்....

வாழ்க தமிழ் வளர்க தமிழர் பாரம்பரியம்

Thursday 10 May 2012

இன்றைய கல்வியின் அவலம்

"கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக" என்றான் வள்ளுவன். நாளந்தா, தக்ஷஷீலம் போன்ற பல்கலைகழகம் மூலம் உலகுக்கே கல்வியை தந்த நாடு. ஆனால் இன்றைய கல்வி நிலையை நினைத்தால் மனம் புளுங்குகிறது. ஏன்? ஒரு மாணவனாக, கல்வியாளனாக, ஆசிரியனாக மற்றும் இந்த நாட்டின் குடிமகனாக என் உள்ளக் கருத்தை உங்கள் முன் வைக்கிறேன். ஒரு நாட்டின் கல்வி அந்த நாட்டின் மனித வளத்தை உயர்த்த உதவ வேண்டும். மக்களின் மனதில் நல்ல பண்பு பதிவை உருவாக்க வேண்டும். மனதில் தைரியத்தை வளர்க்க வேண்டும். ஆனால் இன்றைய கல்வி முறை இத்தகைய மன வளத்தை ஆரோக்யமான சமுதாயத்தை வளர்க்கிறதா என்றால் கேள்விக்குறி?

இன்றைய இளைய தலைமுறை எந்த அளவுக்கு தரம் கெட்டு போய் விட்டது என்றால் எட்டாம் வகுப்பு வகுப்பு மாணவன் தூக்கு போட்டுகொள்கிறான், ஒன்பதாம் வகுப்பு மாணவன் தன் ஆசிரியையே கொல்கிறான், கல்லூரி மாணவர்கள் ஈவ் டீசிங்கினால் துன்புறுத்தப்படுகிரார்கள், கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை, கல்லூரி மாணவர் சாலை விபத்தில் மரணம், புத்தாண்டு கொண்டாட்டத்தில் சக மாணவியை மாணவர்கள் பலாத்காரம் செய்தனர்,  கல்லூரி மாணவர்கள் போதை மருந்துக்கு அடிமை, வீட்டு பாடம் செய்யாத  மாணவர்களை
ஆசிரியர் கொடுமை  படுத்தினார், கல்லூரி மாணவியை ஆசிரியர் கற்பழித்தார், பள்ளி மாணவர்களை ஆசிரியர் தன் வீட்டு வேலை செய்ய வைத்தார், காலதாமதமாக பள்ளிக்கு வந்த மாணவர்களை கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இது அன்றாட செய்தி.

 இப்படி பட்ட பிரச்சனைக்கான காரணங்களை அலசி ஆராய்ந்தால் பல உண்மைகள் வெளிவரும் அதில் சில... படிக்க முடியவில்லை, மதிப்பெண் குறைவு, மற்ற மாணவர்களைப் போல் என்னால் சுகமாக வாழ முடியவில்லை, அந்த பெண்ணை போல் நான் அழகாக இல்லை, என் அப்பா சரி இல்லை தினமும் குடித்து விட்டு அம்மாவை அடிக்கிறார், எனக்கு வாகண வசதியில்லை, சுகமாக வாழ ஆசைப்பட்டு விபசாரத்தில் சிக்கிவிட்டோம், என் காதலிக்கு பிறந்த நாள் பரிசு வாங்க காசு இல்லை, அந்த திரைப்படத்தை பார்த்தேன் அதை போல செய்ய ஆசை, இந்த விசயத்தை அந்த திரைப்படத்தை பார்த்து தெரிந்து கொண்டேன் இப்படி குடும்பத்தில் பிரச்னை, மன உளைச்சலை தீர்க்க இந்த வழியை நாடினேன், என் பிள்ளை என் சொல் கேட்பதில்லை. 

மகனை தூக்கில் தொங்கும் படி செய்யும் அளவுக்கு பெற்றோர்களின் பேராசை. ஆசிரியர்களின் அடாவடித்தனம், நான் தான் இந்த நாட்டின்  தலைவன் என்ற அகங்காரம் பிடித்த அரசியல்வாதிகள், என்னை இந்த வேளையில் இருந்து தூக்க யாராலும் முடியாது என்கிற அரசு ஊழியர்கள், எனக்கு வேலை இல்லாமல் சம்பளம் வேண்டும் என்கிற தொழிலாளிகள், நான் சுகமாக வாழ வேண்டும் என்கிற மடத்தனம், கடன் வாங்கியாவது மகனுக்கு பைக் வாங்கி தருவேன் என்கிற சராசரி பெற்றோர்கள், கஞ்சி குடிக்க வலி இல்லா விட்டாலும் தன் மகனை தனியார் பள்ளியில் தான் சேர்த்துவேன் என்று அடம் பிடிக்கும் சாதாரண கூலி தொழிலாளிகள், காலணா  காசா இருந்தாலும் அது கவர்மென்ட் காசாத்தான் இருக்க வேணும் என்று பெண்ணை பெத்தவர்கள் மாப்பிள்ளை தேடும் நிலைமை. 

வாழ்ந்தால் பணக்காரனாக வாழ வேண்டும் என்ற நடுத்தர மக்கள், பணம் சம்பாறிக்க எந்த வழியானாலும் பரவாயில்லை என்று  நினைக்கும் இளைய சமுதாயம், குடி, கூத்து, சினிமா என ஊர் சுற்றும் வெட்டி பயல்கள், குடிப்பது தப்பு இல்லை என்று சொல்லும் ஆராய்ச்சி கட்டுரை, அளவாக குடித்தால் செக்ஸ் இன்பம் நன்றாக இருக்கும் என்ற தின பத்திரிக்கையின் குருந்தகவல்கள், அதிகமாக நுகரப்படும் அசைவ உணவுகள், வெளி நாட்டின் மோகங்கள், எப்படி வாழ்ந்தாலும்  பரவாயில்லை என்கிற உள்ளுணர்வு, நான் இங்கு என்ன செய்தால் யாருக்கு தெரியப்போகிறது என்ற நகர மக்களின் நாகரீக முனேற்றம், இவள் இல்லாவிட்டால் இன்னொருத்தி என்கிற கால கேடு, கணினியை திறந்தால் காம இச்சையை தூண்டும் பாலான படங்கள், முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர் அப்படி இல்லை, என் அப்பாவே அப்படித்தான் என்று கூறும் இளம் பிஞ்சுகள், இன்னும் பல... இவை எல்லாம் காரணம். இது எல்லாம் மேற்போக்கான காரணமாக இருக்க முடியுமே தவிர உண்மையான காரணமாக இருக்க முடியாது. முடியவே முடியாது. அப்படி என்றால் உண்மையான காரணம் என்ன?

 காலக் கொடுமை? எங்கேயோ தவறு இருக்கிறது. என்ன அது? பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், அரசாங்க ஊழியர்களையும், அரசியல்வாதிகளுயும்  மட்டுமே குறை சொல்ல முடியாது. அது அவர்கள் தவறு அல்ல. கல்வியின் தவறாக கூட இருக்கலாம் ஏன் என்றால் அவர்களும் இந்த கல்வியை தான் படித்திருக்கிறார்கள். எங்கேயோ தவறு நடக்கிறது. ஏன் இந்த ஆங்கில மோகம், பொறியியல் மோகம், மருத்துவ மோகம். இந்த பட்டம் பெற்றால் தான் வாழ முடியும் என்றால் நாட்டில் பாதி பேருக்கு மேல் சாக வேண்டியதுதான். அனைவரும் அறிந்த உண்மை. அறிந்தும் மக்கள் தன் மகளை அல்லது மகனை ஏன்  இவ்வளவு கொடுமைபடுத்துகிறார்கள். புரியாத புதிர்!

மக்களிடையே உள்ள ஆசை, கோபம், பேராசை, மோகம், அகங்காரம், பொறாமை என்ற ஆறு எதிரிகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  இருந்து அவனை கீழான பாதையை நோக்கி இழுக்கின்றன. இந்த ஆறு பிரச்சனைகளை பற்றி இன்றைய கல்வி சரியான கண்ணோட்டத்தை கொடுக்கிறதா என்றால் அழுத்தம் திருத்தமாக கூற முடியும் இல்லை என்று. சரியாக நன்றாக சிந்தித்து பார்த்தால் நமக்கு இவ்வளவு நாள் புரியாத ஒன்று புரியும் என்ன அது. மேலே விவரிக்கப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் இந்த ஆறு வகையான மனிதனின் உள் எதிரிகளினால் நடக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக புரியும். அப்படி என்றால் இந்த பிரச்சனைகளை பற்றி நம் பாட புத்தகத்தில் பேசபட்டிருக்கிறதா என்றால் அதுவும் சுத்தம். 

அறிவியலுக்கும், கணிதத்திற்கும், மருத்துவத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் பண்பாட்டு கல்விக்கு கொடுப்பதில்லை. வேத காலத்தில் முதலில் பண்பாட்டு கல்வி போதிக்கப்படும் பின்னர் அவரவருக்கு விருப்பப்பட்ட படம் கற்பிக்கபடும். அதனால் தான் மிக சிறந்த கல்வியாளர்களான ஜனகர், வியாசர், விஸ்வாமித்திரர் போன்றோர் கூட சாதாரணமான மிக தரமான அனைவருக்கும் வழிகாட்டியாக வாழ முடிந்தது. ஆனால் இன்றைய கல்வியில் ஒழுக்கம் என்றால் என்ன விலை என்று நிர்ணயக்கும் நிலை உள்ளது. ஒழுக்கம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்று கேள்வி கேட்கும் பல முட்டாள்களை சர்வசாதாரணமாக பார்க்க முடியும். 

இன்றைய கல்வி பணத்தை உருவாக்கும் பண முதலையாக இருக்க முடியுமே தவிர தரமான வாழ்க்கை தர முடியவே முடியாது. இங்கு தரம் என்பது நாகரீகத்தை  குறிப்பதல்ல கலாசாரத்தை குறிப்பது. இந்த இடத்தில் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் நாகரீகத்திற்கும் கலாசாரத்துக்கும் உள்ள வித்யாசம். நாகரீகம் என்பது நம்மிடம் உள்ள பொருட்களின் அளவை பற்றியது,  கலாசாரம் என்பது நம்மிடம் உள்ள மன நிம்மதியை குறிப்பது. இங்கு நான் குறிப்பிட்ட தரம் என்பது  கலாசார வாழ்கையை.  இன்றைய கல்வியில் பண்பாட்டு கல்வியை இணைத்து மாணவ சமுதாயத்தின் தனிமனித ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும் அதுவே நிரந்தரமான தீர்வாக அமைய முடியும். இன்றைய மாணவர்கள் நாளைய பெற்றோர்கள் "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" இதுவே சரியான தருணம். எனவே அனைவரும் மாணவ சமுதாயத்தின் மீது  கவனம் கொடுக்க வேண்டும்.

கல்வியாளர்களும் சிந்தனையாளர்களும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பெற்றோர்களே மாணவர்களே ஆசிரியர்களே கல்வியாளர்களே சிந்தியுங்கள் செயல்படுங்கள். காலம் கனிந்துவிட்டது. கால தாமதம் பேரிடரில் போய் முடியும் .

பாரத நாடு

இந்த பரந்த பாரத நாட்டிற்கு அந்தப் பெயர் வந்ததற்கு காரணம் இந்நாட்டின் பேரரசர் பரதன். சிறுவயதில் பள்ளிக்கூட பாடத்தில் கூட படித்த ஞாபகம் உண்டு. முன்னொரு காலத்தில் இந்த நாட்டை பரதன் என்றொரு அரசன் ஆண்டு வந்தான். அதனால் இது பாரத நாடு என பெயர் பெற்றது என்று. தற்போது எந்த பள்ளிப் புத்தகத்திலும் அது போன்ற வாசகம் காண முடியாது. ஏனெனில் அது போன்ற வாசகம் இந்தியாவை இந்து நாடு என்று குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்து விடுமே. அதனால் அப்படி போடமாட்டார்கள். சரி, அதை அப்புறம் பார்ப்போம்.


மகோந்நதமான சக்கரவர்த்தி. வீரம் பொருந்தியவர். ஹஸ்தினாபுரத்தின் எல்லைகளை விரிவுபடுத்திய வீரர் பரதன். அகண்ட பாரதத்தை ஒரு குடையின் கீழ் உண்டாக்கியவர். இத்தகைய கம்பீரமான அரசருக்கு பிற்காலத்தில் இந்த தேசம் அவரது பெயராலேயே காலங்காலமாக அழைக்கப்படப் போகிறது என்பது அப்போது தெரியாது.


தர்மவானான அவருக்கு அத்தகைய சிறப்பை உண்டாக்கிய காரியம் எது? நாட்டின் எல்லைகளை விரிவு படுத்திய வீரமா? கொடை வள்ளல் என்ற பெருமையா? அரசன் என்பதால் பயமா? இல்லை.


ஒரு நாள் அவர் வெளியிட்ட ஒரு அறிவிப்பு அவருக்கு அத்தகையப் பெரும் பெயரை உண்டாக்கியது. இந்த உலகில் எதிர் வரும் அரசாங்கங்களுக்கெல்லாம் ஒரு சிறந்த வழிகாட்டும் தர்மமாக மாறியது.


துஷ்யந்த ராஜாவுக்கும் சகுந்தலைக்கும் பிறந்த சக்ரவர்த்தி பரத மாமன்னர் தனக்கு வயதாகி விட்டதை உணரத்துவங்கினார். தனக்குப் பிறகு இந்நாட்டை ஆளப்போகும் இளவரசனை அறிவிக்க ஆவலுற்றார். ஆனால் யார் என்பதை அறிவிக்க வேண்டுமே. பரத மன்னருக்கு ஒன்பது மகன்கள் இருந்தனர். அவர்களில் மூத்த மகனுக்குத்தான் இளவரசன் என்ற பட்டத்தை அளிப்பார் என்று சபையோர் எல்லாம் எதிர்பார்த்து அறிவிப்புக்குக் காத்திருந்தனர்.


ஆனால் பரத மன்னன் மிகுந்த மனசஞ்சலத்திற்கு ஆளானார். தனது தாத்தாவும் மகரிஷியுமான கந்தரிடம் சென்று தனது சஞ்சலத்திற்கு தீர்வு கிடைக்குமா என்று கேட்கலானார்.


மகரிஷியே “ஒன்பது மகன்களுக்குத் தந்தையான நான் யாரை இளவரசனாக ஆக்குவது என்பதில் சஞ்சலமுற்றிருக்கிருக்கிறேன்” என்றார்.


அதற்கு ரிஷியோ “இந்தப் பிரச்சனையின் அர்த்தம், அகண்ட பூமியை வென்ற பரதன் தன்னைத்தானே வெல்லவில்லை என்பதையே காட்டுகிறது. உன்னையே நீ வெல்லாவிடில் உன்னால் ஞாயம் சொல்ல முடியாது. உன்னையே நீ வெல்ல முயற்சி செய். உனது மனம் எதை விரும்புகிறது என்று நீ முதலில் முடிவு செய். அதில் உறுதியாக இரு. எனது ஆசீர்வாதங்கள்” என்று மட்டும் சொல்லி அனுப்பிவைத்தார்.


மறுநாள் பரத மன்னன் அரசவைக்கு வருகிறார். தனது சிம்மாசனம் நோக்கிச் செல்கிறார். அருகில் அமர்ந்திருந்த தனது தாய்க்கு வணக்கம் தெரிவித்து விட்டு மகா மந்திரியை அருகில் அழைத்து தான் எழுதி வந்த ஓலையை வாசிக்கச் செய்கிறார்.

 
பரத மன்னரின் அறிவிப்பை மந்திரி வாசிக்கத் துவங்கினார், “நான் துஷ்யந்த புத்திரன் பரதன் எனது நாட்டு மக்களுக்கு வணக்கத்தை தெரிவிக்கிறேன். என்னுடன் வெற்றி பயணத்தில் பிரயானித்த எனது வீரர்களுக்கும் எனது வணக்கத்தையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன். அவர்களால் தான் இந்த எல்லைகள் விரிவடைந்து பெருமைமிக்க நாடு உண்டானது. இதோ இந்த ராஜ சிம்ஹாசனத்திலிருந்து சொல்ல விழைகிறேன். ஒரு அரசன் என்பவன் தேசம் மற்றும் தேச மக்களை விட முக்கியமானவன்
அல்ல.
ராஜாவுக்கு மூன்று முக்கிய கடமைகள் உண்டு

1. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நீதி வழங்குவது

2. நாட்டையும் மக்களையும் காப்பது.

3. அந்தக் கடைமைகளை தவறாமல் நிறைவேற்றும் இளவரசனை நாட்டுக்குத் தருவது ஆகியவை தான் அந்த மூன்று கடமைகள்.

இந்த குணங்களை எனக்குப் பிறந்த எந்த மகனிடமும் நான் காணவில்லை”. இதை வாசித்த மந்திரி அரசனை அதிர்ச்சியுடன் பார்க்க பரதனோ மேலும் படி என்று சைகை காட்டினார். மந்திரி மேலும் படித்தார். “ஆகையால், இந்நாட்டின் ப்ரஜையும், சிறந்த வீரனுமான பாரத்வாஜ பூமன்யூவை எனது புத்திரன் ஆக்கி அவனை இளவரசனாக அறிவிக்கிறேன்” என்றார்.

அரசவையே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பரதனோ, “இந்த முடிவு எல்லோருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கும். யாருக்காகிலும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம்” இப்படி ஒரு அறிவுப்பு வரும் என்று சற்றும் எதிர்பாராத மந்திரி மன்னரிடம் தன் கருத்தைச் சொல்ல அனுமதி கேட்கிறார்.

மன்னன் அனுமதிக்கிறான். மந்திரி கூறினார், “மகாராஜா, மனதில் தோன்றியதைத் தான் கேட்கிறேன். வாழையடி வாழையாக மன்னனின் புத்திரனுக்குத்தான் அரச சிம்மாசனம். ஆகவே…” என இழுக்கையில் மன்னன் அரியனையிலிருந்து வேகமாக எழுந்தான்.

“ஆகவேதான் இந்த பாரம்பர்யத்தை மாற்ற நினைக்கிறேன் மந்திரியாரே!” என்றார். கேவலம் பிறப்பின் அடிப்படையில் மட்டுமே யாராலும் நாட்டின் அரசனாக முடியாது. ராஜசிம்மாசனத்தின் மீதுள்ள அதிகாரம் என்பது பிறப்பின் அடிப்படையால் மட்டுமல்ல, செயல்பாடு யோக்கியதை போன்றவைகள் வைத்தே தீர்மானிக்கப்பட வேண்டும். ராஜா என்ற அதிகாரம் தன் குடும்பத்திற்காகவும் மகனுக்காகவும் அல்ல. அவனது தேசம் மற்றும் நாட்டின் விசுவாசிகளுக்காகத்தான். எனது புத்திரர்கள் கடமையும் கன்னியமும்
தவறியதால் அவர்களுக்கு அரியனை ஏறும் தகுதி கிடையாது.
அரசியலின் ஆதாயம் புத்திர நலன் அல்ல உலக நலன் தான். ஒரு ராஜா என்பவன் புத்திர மோகத்தில் தனது நாட்டின் எதிர்காலத்தை அடகு வைப்பவன் அல்ல. எனது முடிவே இறுதியானது” என்று கூறி சபையை விட்டு வெளியேறினார்.

அன்றிரவு பரதனின் தாய் சகுந்தலை கவலையுடன் காணப்பட்டாள். தனது மகன் அரசனாக இருந்தும் அதிகாரத்தை தனது பேரப்பிள்ளைகளுக்கு கொடுக்காமல் யாரோ ஒருவருக்குக் கொடுத்து விட்டான் என்று வருத்தத்தமடைந்தாள். இதை கேள்விப்பட்ட பரத சக்ரவர்த்தி தன் தாயிடம் சொன்ன வாக்கியங்கள் அரச தர்மத்தின் உச்சம்.

பரதன் தன் தாயிடம் விளக்கினான் ” தாயே எனது மகனுக்கு அதிகாரத்தைக் கொடுக்கவில்லை என்று நீங்கள் வருந்துகிறீர்கள். ஆனால் தாயே, நான் தந்தை மட்டுமல்ல அரசனும் கூட. தர்மத்தின் பொருட்டு செயல் படும் கடமை எனக்கு உள்ளது. என் குடும்பம் மிகப்பெரியது தாயே! இப்போது இளவரசனாக அறிவிக்கப்பட்டிருப்பவனும் என் புத்திரன் தான். அவனும் இந்நாட்டின் ப்ரஜை தானே. என் நாட்டின் பிரஜைகள் யாவருமே என் குடும்பம் தான்.

ஒரு வேளை எனது புத்திரனின் ஒருவனை நான் அரசனாக அறிவித்திருந்தால் இந்த நாடு, இதன் பிரஜை இரண்டுக்குமே அநீதி நடந்திருக்கும். அம்மா, உங்கள் புத்திரன் ஒரு ஞானவான் என்று கர்வம் கொள்ளுங்கள். அதுவே எனக்கும் பெருமை” என்று தன் தாயின் வருத்தத்தை துடைத்து வெளியேறினார் தர்மவான் பரதன். ராஜாவின் வாரிசே ராஜாவாக முடியும் என்ற நிலையை தர்மத்தின் பொருட்டு மாற்றிய முதல் அரசன் சகுந்தலையின் மகன் பரதன்.

நினைவூட்டுகிறேன்

இந்தியா மீண்டும் மீண்டும் தன் மீது போர்தொடுத்த பயங்கரவாதிகளை என்ன செய்தது?
 
அபு சலீம் – ஒரு இஸ்லாமியப் பயங்கரவாதி 1993 மும்பை குண்டு வெடிப்பை நிகழ்த்திய சதிகாரர்களுள் முக்கியமான ஒருவன். குண்டு வெடிப்பைத் திட்டமிட்டு நடத்திய தாவூத் இப்ராஹிமின் ஒரு முக்கிய அடியாள். அவன் குண்டு வெடிப்புக்குப் பின்னால் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று விட்டான். அவனை இந்திய அரசின் உளவுப் பிரிவினரால் தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை. மும்பைக் குண்டு வெடிப்பில் மட்டும் அல்லாது இந்தியாவில் ஏராளமான கொலை, கடத்தல் குற்றங்களையும் செய்தவன். ஆள்களைக் கடத்திச் சென்று பணம் பறிப்பவன். பணத்துக்காகக் கொலைகள் செய்யும் ஒரு பயங்கரவாதி. அவனை 2002ம் வருடம் செப்டம்பர் மாதம் இண்டர்போல் போர்ச்சுக்கலின் லிஸ்பன் நகரத்தில் வைத்து அடையாளம் கண்டு இந்தியாவுக்குத் தகவல் தெரிவித்தது. அவனையும் அவனுடைய காதலியான நடிகை மோனிகா பேடியையும் இந்திய அரசிடம் ஒப்படைக்க போர்ச்சுக்கல் அரசு மறுத்து விட்டது. கடுமையான சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இந்தியாவில் பல நூறு பேர்களின் கொலைகளுக்குக் காரணமான கொடூரமான கொலைகாரனுக்கு நாங்கள் மரண தண்டனை விதிக்க மாட்டோம் என்ற உறுதி மொழியை போர்ச்சுக்கள் நீதிமன்றத்துக்கு இந்தியா கொடுத்த பின்பே கடும் போராட்டத்திற்குப் பின்பே 4 வருடச் சட்டப் போராட்டத்திற்கு பின்பே அவனை போர்ச்சுக்கல் அரசு இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புக் கொண்டது. இப்பொழுது அவனுக்கு கடுமையான தண்டனை எதையும் விதிக்காமல் தன் சிறையில் வைத்து உபச்சாரம் செய்து கொண்டிருக்கிறது இந்திய அரசு. இது வரை அவனுக்கு எந்த வித தண்டனையையும் இந்திய கோர்ட்டுகள் வழங்கவில்லை. நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் படு கொலைகளுக்கு நீதி இந்தியாவில் வழங்கப் படவேயில்லை.


தாவூத் இப்ராஹிம் – 1993, 2008 மும்பை குண்டு வெடிப்புகளுக்கும் இந்தியாவில் பல ஆயிரம் கோடி கள்ளக் கடத்தல் மற்றும் சட்டவிரோத வணிகங்களுக்கும் மூளையாக, தலைவனாக இருக்கும் பயங்கரமான இஸ்லாமிய பயங்கரவாதி. அவன் மீது நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற கொலைக் குற்றச் சாட்டு ஆதாரங்களுடன் சாட்டப் பட்டுள்ளது. இந்தியாவிற்குள் போதை மருந்து கடத்துவது இந்திய நகரங்களில் குண்டு வைத்து பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்துவது போன்ற எண்ணற்ற கொடூரமான சதிச் செயல்களை இன்று வரைத் தொடர்ந்து செய்து வருபவன். எண்ணற்ற அப்பாவி இந்துக்களின் உயிர்களைப் பறித்தச் சண்டாள அரக்கன். இந்தியாவின் இருப்பையே அழிக்க உறுதி பூண்டுள்ள ஒரு தேச விரோதி மனித குல விரோதி இந்த தாவூத். அமெரிக்க அரசு உட்பட பல நாடுகள் அவனை ஒரு உலக அளவிலான முக்கிய பயங்கரவாதியாக அடையாளம் கண்டுள்ளன. அவன் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று பாக்கிஸ்தானில் உள்ள கராச்சி நகரத்தில் வசிப்பதாக பல முறை இந்திய அரசு பாக்கிஸ்தான அரசிடமும் அமெரிக்க அரசிடமும் முறையிட்டு அவனை நாடு கடத்துமாறு கெஞ்சி வருகிறது. அவனை பாலிவுட்டின் நடிகைகளும் இந்தியாவின் பிற பயங்கரவாதிகளும் சந்திக்க முடிகின்றது. அவனது மகளின் திருமணத்தில் இந்தியர்கள் கலந்து கொள்ள முடிகிறது. ஆனால் இன்று வரை அவனைக் கைது செய்து இந்தியா கொண்டு வர வக்கில்லாமல் இந்திய அரசு பாக்கிஸ்தானின் ராணுவத் தலைமையிடமும் அமெரிக்க அரசிடமும் பிரிட்டனிடமும் இன்னும் பல நாடுகளிடமும் அவனைத் திருப்பித் தரக் கோரி மண்டியிட்டுக் கெஞ்சி வருகிறது. கிஞ்சித்தும் சுயமரியாதையும் தம் நாட்டுப் பிரஜைகளின் உயிர்களுக்கு மரியாதை அளிக்காமலும் இந்தியாவின் இருப்புக்கே அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு பயங்கரவாதியை இன்று வரைப் பிடித்து அவனால் கொல்லப் பட்ட மக்களுக்கு நீதி வழங்க வக்கில்லாமல் இருக்கிறது இந்திய அரசு.


டைகர் மோமன், காந்தாஹார் விமானக் கடத்தல் பிணையினால் விடுவிக்கப் பட்ட பயங்கரவாதிகள் முதல் கடைசியாக நடந்த மும்பைக் குண்டு வெடிப்புகள் வரை இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் நடக்கும் அத்தனை விதமான பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தும் அனைத்து விதமான பயங்கரவாதிகளும் இந்தியாவிற்குள் எந்தவித சிக்கலும் இல்லாமல் நுழைந்து தங்கள் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்த முடிகிறது. 2008ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புக்கும், அக்சர்தம் கோவிலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் திட்டமிட்ட டேவிட் ஹெய்லி என்ற அமெரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதியை அமெரிக்க அரசு பிடித்து விட்டாலும் கூட இந்திய உளவுத் துறையினர் அவனை விசாரிப்பதற்குக் கூட அனுமதி வழங்கப் படவில்லை.

 
இந்தியாவின் இறையாண்மையின் சின்னமாக விளங்கும் பாராளுமன்றத்தைத் தாக்கிய அப்சல் குரு என்பவனை இந்தியாவின் உச்ச நீதி மன்றம் பலமுறை தூக்கிலுமாறு உத்தரவிட்டும் கூட இன்று வரை இந்தியாவை ஆளும் சோனியாவின் காங்கிரஸ் அரசாங்கம் பிடிவாதமாக அவனுக்குத் தண்டனை அளிக்க மறுத்து வருகிறது. அவனைத் தூக்கில் போட்டால் முஸ்லீம் ஓட்டுக்கள் கிடைக்காது என்ற ஒரே காரணத்திற்காக கேடுகெட்ட காங்கிரஸ் அரசாங்கம் அவனைப் பாதுகாத்து வருகிறது.
இப்படி எத்தனையோ உதாரணங்களை நாம் கொடுத்துக் கொண்டே போகலாம். இந்தியாவின் ஆட்சியாளர்கள் மீது விரக்தியையும் வெறுப்பையும் அவமானத்தையுமே இந்த நிகழ்வுகள் நமக்கு ஏற்படுத்துபவை. இந்தியாவின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்க முடியாத, இந்தியாவையும் அதன் மக்களையும் அன்றாடம் கொன்று தீர்க்கும் மிருகங்களைக் கண்டு பிடிக்க முடியாத, அப்படியே கண்டு பிடித்தாலும் அவர்களை விசாரித்து உரிய தண்டனை கொடுக்க பலம் இல்லாத கோழையான அரசாங்கங்களையே இந்தியா தொடர்ந்து பெற்று வருகிறது.
சுயமரியாதையும், சுய பாதுகாப்பு உணர்வும் ஒற்றுமையும் இல்லாத ஒரு சமூகம் இந்த உலகில் வாழ அருகதையில்லாத எளிதில் அழிக்கப் படக் கூடிய, உலகில் மரியாதை பெறாத முதுகெலும்பில்லாத ஒரு கேவலமான சமூகமாகி விடும். அப்படிப் பட்ட கேவலமான ஒரு இடத்தில் தான் இந்தியா இன்று இருக்கிறது பெரும் மன வலியை ஏற்படுத்தும் ஒரு உண்மை. சீனா முதல் பங்களாதேஷ், இலங்கை வரை இந்தியாவை ஒரு முதுகெலும்பில்லாத காமெடிப் பீசாக மட்டுமே உலக நாடுகள் கருதுகின்றன. அதன் காரணம் நம் வரலாற்றை உணர்ந்து நம் வலிமையை உறுதி செய்யாத பலவீனமான அரசியல்வாதிகளும் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் நம் பலவீனமான மக்களுமே.

Tuesday 8 May 2012

காலத்தை பற்றிய குறிப்பு

பொழுது போகவில்லை.குறைந்தபட்சம் பொழுது எப்படி போகுதுன்னாவது தெரிஞ்சிக்கலாம் வாங்க...

பொழுது என்பது காலம் என்று பொருள்படும். காலம்சிறுபொழுது, பெரும்பொழுது என்று இரண்டு வகையாகப்பிரிக்கப்பட்டுள்ளது.

சிறு பொழுது

சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும்.சிறுபொழுது பின்வருமாறு அமையும்.

வைகறை - விடியற்காலம்
காலை - காலைநேரம்
நண்பகல் - உச்சி வெயில் நேரம்
எற்பாடு - சூரியன் மறையும் நேரம்
மாலை - முன்னிரவு நேரம்
யாமம் - நள்ளிரவு நேரம்
சிறுபொழுது ஆறும் ஒரு நாளின் ஆறு கூறுகளாகஇருப்பதை அறியலாம்.

பெரும்பொழுது

பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் காலப்பிரிவு ஆகும்.ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களையும் ஆறுபிரிவுகளாகப் பிரிப்பர். இது நீண்ட காலப் பிரிவாக இருப்பதால்பெரும்பொழுது எனப்படுகிறது. ஆண்டில் உள்ள பன்னிரண்டுமாதங்களும் பின்வருமாறு ஆறு பெரும் பொழுதுகளாகப்பிரிக்கப்பட்டுள்ளன.


சித்திரை, வைகாசி - இளவேனில் காலம்
ஆனி, ஆடி - முதுவேனில் காலம்
ஆவணி, புரட்டாசி - கார் காலம்
ஐப்பசி, கார்த்திகை - குளிர்காலம்
மார்கழி, தை - முன்பனிக் காலம்
மாசி, பங்குனி - பின்பனிக் காலம்

இன்பம்

அழியும் உடலுடன் இரண்டற கலந்து அத்துடன்
அழியும் அற்ப இன்பந்தான் சிற்றின்பம்.
ஆதி அந்தமிலாத இறைவனுடன் இரண்டற கலந்து
அழிவே இல்லாத நிலையை அடையும் இன்பந்தான் பேரின்பம்.
பட்டினத்தார்

Monday 7 May 2012

நாளந்தா பல்கலைக்கழகம்



இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ளது.
உலகின் மிக பழமையான பல்கலைக்கழகம் இது.
கிமு.5 ஆம் நூற்றாண்டில் (கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன்) உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இதில் 10,000கும் மேற்ப்பட்ட மாணவர்கள் சுமார் 60 பாடப்பிரிவுகளில் பயின்றதாகவும் சுமார் 2000 ஆசிரியர்களுடன் இயங்கியிருக்ககூடும் என்கிறது வரலாற்றுக் குறிப்பு.


அனைத்து துறைகளிலும் சிறந்துவிளங்கிய இந்த பல்கலைக்கழகத்தில் கொரியா, ஜப்பான், சீனா, தீபத், இந்தோனேசியா, துருக்கி போன்ற பிறநாடுகளில் இருந்து மாணவர்கள் வந்துபயின்றதும் குறிப்பிடதக்கது.


இப்போதையா மேலைநாடுகள் எனக்கூறப்படும் பிறநாடுகளில் காட்டுவாசியாக மனிதன் வாழ்ந்த காலத்திலேயே பல்கலைக்கழகம் அமைத்து பாடம் நடத்தியவன் இந்தியன்.............