Monday 11 June 2012

கடவுளைக் காட்டுங்கள்

கடவுள் மீது நம்பிக்கை இல்லாத நாத்திகன் ஒருவன், ஞானி ஒருவரிடம் எனக்குக் கடவுளைக் காட்டுங்கள் என்று கேட்டான். அதற்கு ஞானி அது முடியாத காரியம். கடவுளை நேரிடையாக பார்க்க முடியாது என்றார். அதற்கு அவனோ, கடவுளைப் பார்த்தே ஆகவேண்டும் என வற்புறுத்த, ஞானி அவனை வெளியே கூட்டி வந்தார். அது கோடைக் காலம். பகல் வேளை. அண்ணாந்து சூரியனைப்பார் என்று ஞானி கூற, நாத்திகனோ முடியாது, அது கஷ்டமான காரியம்! என்றான். சூரியன் இறைவனால் ஆக்கப்பட்ட கிரகம். அதனுடைய ஒளியையே உன்னால் பார்க்க முடியவில்லையே! அப்படியிருக்க இறைவனைக் காணுவது எப்படி முடியும் ? என ஞானி கூற மௌனமானான்.
 

No comments:

Post a Comment