Sunday 18 November 2012

கால்நடை செல்வங்களின் கடைசி பயணம்

நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு மிக முக்கியமான விஷயம். நம் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கேரளாவிற்கு பசு மாடுகள், பசு கன்று குட்டிகள், எருமைகள், கோழிகள் மற்றும் ஆடுகள் கடத்தப்படுவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இது இப்படியே போனால் நம் எதிர்கால சந்ததியினர் பாலுக்கு பதிலாக பவுடர் பாலைத்தான் குடிக்க வேண்டியிருக்கும். அது மட்டுமல்ல விவசாயத்திற்கு பயன்படும் சாணம் கூட இறக்குமதி செய்யும் நிலை ஏற்படலாம். இப்போது நாம் சிந்திக்கா விட்டால், இப்படி பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

நான் என்ன செய்ய முடியும் என்று கேட்கும் நல்ல உள்ளங்களுக்காக இங்கே ஒரு வேண்டுகோள். தயவு செய்து தங்கள் நண்பர்களிடம் இது பற்றி பேசவும். மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவும். தங்கள் ஊரில் உள்ள பள்ளிகளுக்கு சென்று ஒரு சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தவும். இது ஒரு யோசனையே தவிர இதுவே முடிவல்ல. தங்கள் வசதிக்கு தகுந்த மாதிரி மாற்றி அமைத்து கொள்ளலாம். அது சரி என்ன பேசுவது. இதோ உங்களுக்காக ஒரு வீடியோ. இந்த வீடியோவில் பல உண்மைகள் உள்ளன. தயவு செய்து இந்த வீடியோவை பார்க்கவும். அதுவே தாங்கள் பரப்ப வேண்டிய செய்தி.

தங்களுடைய நண்பர்களுக்கு இந்த
கருத்துக்களை மினஞ்சல் மூலமாக அனுப்பவும். நீங்கள் இந்த கருத்துக்கு நிச்சயமாக பதில் தருவீர்கள் என எதிர்பார்கிறேன்.

நன்றி! நன்றி!! நன்றி!!!

வீடியோவின் இணைப்பு கீழே தரப்பட்டுளன:


www.youtube.com/watch?v=o8-Hi2N8FcE _ English

http://www.youtube.com/watch?v=eGHfPQGbUlc&feature=youtu.be - Tamil

No comments:

Post a Comment